Saturday, 30 March 2013

ஆசிரியர் பயிற்சி பட்டயத் தேர்வின் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது!


2012, ஜூனில் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வு எழுதிய ஆசிரியர் கல்வி தனித்தேர்வர்களுக்கு இன்று முதல் சான்றுகள் வழங்கப்படுகிறது. அந்தந்த ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மற்றும்  மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில்  பெற்றுக்கொள்ளலாம். பட்டயச் சான்றிதழை பெற, 04-04-2013ம்  தேதிக்குள், இந்த அலுவலகங்களை, நேரிலோ, தபால் மூலமோ தொடர்பு கொள்ளலாம்.

மறுகூட்டல் விண்ணப்பத்தேதி 

03-04-2013 முதல் 05-04-2013 வரை அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்படும். மேலும்  5-04-2013 தேதிக்குள் விண்ணப்பங்களை, சம்பந்தப்பட்ட மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், நேரில் சமர்பிக்க வேண்டும். 

Saturday, 16 February 2013

குரூப் 2 தேர்வு முடிவு வெளியீடு!


நகராட்சி கமிஷனர் உள்ளிட்ட, 19 வகையான பதவிகளில் உள்ள, 3,631 காலி பணியிடங்களை நிரப்ப, 12-08-2012ல் போட்டித் தேர்வு நடந்ததுஇதில் 6,50,000 பேர் பங்கேற்றனர்.
தர்மபுரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதால் தேர்வாணையம் தேர்வை ரத்து செய்து, 04-11-2012ல்மறுதேர்வு நடத்தியது. இதன் முடிவு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 
தற்போது வெளியிட்டுள்ள முடிவில், தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு 22ம் தேதி முதல், தேர்வாணையத்தில் நேர்காணல் நடக்கும். இந்த அறிவிப்பு வகுப்பு வாரியாக  விரைவில் வெளியிடப்படும் என்று தேர்வாணையத் தலைவர் தெரிவித்துள்ளார்.
தேர்வு முடிவு தெரிந்து கொள்ள கீழே க்ளிக் செய்யவும்

வேளாண் அதிகாரிகள் பட்டியல் டி.என்.பி.எஸ்.சி.வெளியீடு !




வேளாண் அதிகாரிகள் பட்டியல் 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 460 வேளாண் அதிகாரிகளை தேர்வு செய்து நேற்றிரவு இணையதளத்தில் பட்டியல் வெளியிடப்பட்டது
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய இரண்டிலும்தேர்வர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில்இறுதி தேர்வுப் பட்டியலைதேர்வாணையம் வெளியிட்டதுஇவர்களுக்குபணி ஒதுக்கீட்டு ஆணை, 20ம் தேதி வழங்கப்படும்.

தேர்வு பட்டியலை தெரிந்து கொள்ள கீழே க்ளிக் செய்யவும் http://www.tnpsc.gov.in/results/CML_AO.pdf


Friday, 15 February 2013

குரூப்-1 தேர்வு புதிய முறையில் நடைபெறுகிறது!


D.S.P., - R.D.O., உள்ளிட்ட பதவிகளில், காலியாக உள்ள, 25 பணியிடங்களை நிரப்ப, 16-02-2013 அன்று குரூப்-1, முதல்நிலைத் தேர்வு நடக்கிறது. தமிழகத்தில் 33 மையங்களில் நடக்கும் இத்தேர்வினை 1,26,000 பேர் எழுதுகின்றனர். குரூப்-1ல் வெற்றி  பெற்றால், எதிர்காலத்தில், பதவி உயர்வு மூலம், ஐ.ஏ.எஸ்., ஆகவும் வாய்ப்புகள் உள்ளன.  இதன் காரணமாகவே, இந்த தேர்வுக்கு, பட்டதாரிகள் மத்தியில், கடும் போட்டி நிலவுகிறது. இந்த தேர்வு, புதிய தேர்வு முறையின்படி நடக்கிறது.
புதிய தேர்வு முறை 
1. முதல்நிலைத் தேர்வு 

2. முக்கியத் தேர்வு 

  1. முதல்நிலைத் தேர்வு, 300 மதிப்பெண்கள்.
  2. இரண்டாம் நிலைத்தேர்வு மூன்று தாள்களாக, தலா 300 மதிப்பெண்கள் வீதம் 900 மதிப்பெண்களுக்கு நடக்கும். மூன்று தாள்களுமே, பொது அறிவை சோதிப்பதாக இருக்கும்.
  3. இறுதிநிலைத் தேர்வான நேர்முகத் தேர்வு 120 மதிப்பெண்களுக்கு நடக்கும். 
  4. முக்கியத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில், தேர்வு செய்யப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Friday, 12 October 2012

10-ம் வகுப்புக்கு செய்முறைப் பயிற்சி வகுப்பு!


பத்தாம் வகுப்பு நேரடித் தனித்தேர்வர்கள் (2012-13) அறிவியல் செய்முறை வகுப்புகளுக்கு மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்களில் பதிவு செய்ய ஆகஸ்ட் 28-ம் தேதி வரை வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், செய்முறை பயிற்சி வகுப்புகளுக்கு பதிவு செய்ய மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கைகள் வந்ததையடுத்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் 15-10-2012 முதல் 31-10-2012 வரை அவகாசம் வழங்கியுள்ளது.
இதற்கான விண்ணப்பப்படிவத்தை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விவரங்களை இரண்டு நகல்களில் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்களிடம் 31-10-2012 ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

ஆன்லைனில் விண்ணப்பம் பெற கீழே க்ளிக் செய்யவும்

விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யும் முறை 


Tuesday, 9 October 2012

குரூப் 4 தேர்வு முடிவு!


தமிழகத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதிய குரூப் 4 தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கான துறை ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு அக்டோபர் மூன்றாவது வாரத்தில் நடைபெறவுள்ளது. 

இளநிலை உதவியாளர், தட்டச்சர், பில் கலெக்டர் உள்ளிட்ட பதவிகள் குரூப் 4-ன் கீழ் வருகின்றன. அவற்றை நிரப்புவதற்கான தேர்வு கடந்த ஜூலை 7-ம் தேதி நடைபெற்றது. 10,718 காலியிடங்களுக்கு 10,34,421 பேர் எழுதினர்.

டி.என்.பி.எஸ்.சி. மூலம் அறிவிக்கை செய்யப்பட்ட 10,718 காலியிடங்களில் 10,216 இடங்களுக்கு தமிழக அரசின் அனுமதி கிடைத்தது. குரூப் 4 தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை மாலை வெளியிடப்பட்டன. 10,216 பணியிடங்களுக்கு மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்களின் மதிப்பெண் பட்டியல் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. மீதமுள்ள பணியிடங்களுக்கான முடிவுகள் அரசின் பணியாளர் குழுமத்தின் ஒப்புதல் பெறப்பட்ட பிறகு வெளியிடப்படும்.

தேர்வு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் அனைவரும் தங்களது ஸ்கேன் செய்யப்பட்ட கல்வித் தகுதி மற்றும் ஜாதிச் சான்றிதழ் உள்ளிட்ட இதர சான்றிதழ்களின் நகல்களை தேர்வாணைய இணையதளத்தின் (www.tnpscexams.net) மூலம் அக்டோபர் 15-ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான துறை ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு அக்டோபர் மூன்றாவது வாரத்தில் தொடங்கும். கலந்தாய்வு வெளிப்படையாகவும், தரவரிசையின் அடிப்படையிலும் நடத்தப்படும்.

எழுத்துத் தேர்வு மட்டுமே உள்ள தேர்வுகளுக்கான முடிவுகள் அந்தத் தேர்வுகள் முடிந்த மூன்று மாதங்களுக்குள் அறிவிக்கப்படும் என்று தேர்வாணையம் அறிவித்துள்ளது.

தேர்ச்சிப்பெற்றவர்களின் பட்டியல்
http://tnpscexams.net/tnpsc_142012/results/GROUP_IV_RESULTS.pdf

Thursday, 30 August 2012

தகவல் பெரும் உரிமைச் சட்டம், 2005 வழிகாட்டி கையேடு!


தகவல் பெரும் உரிமைச் சட்டம், 2005
வழிகாட்டி கையேடு 

15-06-2005 அன்று ஜனாதிபதி ஒப்புதலைப் பெற்ற இச்சட்டம் 22-10-2005 அன்று அமலுக்கு வந்தது. மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகளை பொது மக்கள் தெரிந்து கொள்ளவும், அரசுத்துறைகளில் தங்களுக்கு தேவையான வழிமுறைகளை அறிந்து கொள்ளவும் இச்சட்டம் கொண்டுவரப்பட்டது. மக்களுக்காக இயற்றப்பட்ட இச்சட்டம் பற்றிய விழிப்புணர்வு, மக்களிடம் அவ்வளவாக இல்லை. இச்சட்டம் குறித்து பாடத்திட்டத்தில் சேர்க்க மத்திய அரசு பரிசீலித்து வரும் நிலையில் மாநில அரசும் அம்முயற்சியினை மேற்கொண்டால் மாணவர்கள் தங்களது உரிமைகைளை பெறுவதற்கு உதவியாக இருக்கும்.